வெடிபொருட்களுடன் இருவர் கைது!

மட்டக்களப்பு, ஓட்டமாவடி பகுதியில் வெடி பொருட்களுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஓட்டமாவடி இரண்டாம் குறிச்சியில் ஒருவரும் வாழைச்சேனை, ஆலிம் வீதியில் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் குறித்த இருவரிடம் இருந்தும் டெட்டனேட்டர்கள், வயர்கள் உட்பட பல பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் குறித்த நபர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.